உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

20 December 2012

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி!! நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!


பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ‌லை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ‌தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம்: பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி: 

"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.பிளஸ் 2வில் சாதனைஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார்.சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார்.பார்வை பெற்றது போல் மகிழ்ச்சிமுதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஞ்சனா கூறினார்.காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி படித்தவர்கள் அரசு வேலை

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

19 December 2012

கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!! எலுமிச்சை ஸ்கரப் இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது. எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார்.

இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு


கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.

ரயில்வே துறையில்: 8800 ஊழல் வழக்குகள் பதிவு

புதுடில்லி : ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 8800 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது 8430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது 5026 வழக்குகளும், டில்லி நிர்வாக அதிகாரிகள் மீது 4783 ஊழல் வழக்குகளும், நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது 3921 வழக்குகளும் 2011ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 2960 வழக்குகளும், தொலைதொடர்பு துறை பணியாளர்கள் மீது 1918 வழக்குகளும், பெட்ரோலியத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 1877 வழக்குகளும், உணவுத் துறை அதிகாரிகள் மீது 1544 வழக்குகளும், சுங்கம் மற்றும் கலால் வரி துறை பணியாளர்கள் மீது 1296 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள்

மும்பை : டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மும்பையில் 1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக கொடுமைகள் குறித்த புகார்களை பெண்களும், பொதுமக்களும் அதில் பதிவு செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இந்த புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டி போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன

ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன. கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் டி.டி.எச் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட இருந்தது. தற்போது அந்த நிலை மாறி ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் தேதி இரவே ஒளிபரப்பபடுகிறது. இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரதமருக்கு பள்ளி மாணவி நோட்டீஸ்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்தது குறித்து பிரதமருக்கு பள்ளி மாணவி ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்த பிரதமர், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வயதாகும் ஊர்வசி ஷர்மா, பள்ளி மாணவி மட்டுமல்ல, ஆர்ஐடி சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VISHNUVARDHAM FILM AJITH ACCIDENT - EXCLUSIVE VIDEO


Shooting Spot Accident Of Ajith During Vishnuvardhan Film - EXCLUSIVE VIDEO

தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

பாதாளச்சாக்கடை திட்டம் ஈரோட்டில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நல்லது தான். பாராட்டுவோம்.. ஆனால் அதை முறையாக செய்கிறார்களா என்றால் .....இந்த திட்டத்தை ஏன் செய்கிறார்களோ என்று வேதனை பட செய்கிறது. நகரத்திலோ மரங்கள் இல்லை.நகரத்தின் காலனிப்பகுதிகளில் பெரும்பாலோர் பல வருடங்களாக மரம் வளர்த்து வருகிறார்கள். அதையும் இந்த திட்டத்தால் எல்லா மரங்களையும் வெட்டி வேரோடு பிடுங்கி விடுகிறார்கள். மரத்தின் அருமை தெரியாதவர்கள் இல்லை...இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னுமே ஏறாது..எல்லாம் பணம் ...தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

- பிரதீப் நிர்மலா, ERODE

FACEBOOK சிறந்த பதிவுகள் - 09


Mohamed Ali
19/12/2012

கடவுள் ரசித்து செதுக்கிய உலகமிது, இது ஒரே நாளில் தோன்றியதில்லை ஒருவர் இருவராகி இருவர் பலராகி உருவான 
உலகமிது. 2012ல உலகம் அழியப்போகுதாம், என்னங்கடா நக்கல் பண்றீங்க, மாயன் எல்லாம் ஒன்னுமில்ல,உலகமும் ஒரே நாளில்
அழிவதுமில்லை,உலகத்தை ரசி...உறவுகளை நேசி...

விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்!

டி.டி.எச்.,-ல் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ‌ரிலீஸ் ஆவது சிக்கலாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் பாணியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.,ல் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கமல் தரப்பிலும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கமல் தமது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதேபோல் தியேட்டர் உரிமையாளர் தங்களது முடிவில் பின்வாங்கவில்லை. இதனிடையே விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிட் ஏர்டெல், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் 80க்கும் மேற்பட்ட தி‌யேட்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்றும், விஸ்வரூபம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் எந்த படமும் இதுபோன்று டி.டி.எச்.ல் ஒளிப்பரப்பபட்டால் அந்த படங்களையும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவால் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தியாவில் இருந்து 7 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள்:


இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், இந்தியாவில் இருந்து, 10 ஆண்டுகளில், 12,300 கோடி டாலர் கறுப்பு பணம், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. 
கட்டமைப்பு துறை:


இதில், 10 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான தொகை, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்கு பயன்பட்டிருக்க வேண்டும்.மேலும், குறிப்பிட்ட தொகை இந்தியாவிலேயே இருந்திருந்தால், தேசிய மின் தொகுப்பு துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால், கடந்த ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட மின்தடை பிரச்னைகள், இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது.அண்மை காலங்களில், இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. எனினும், சட்டவிரோதமாக வெளியேறும் நிதியால், இந்தியா தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான செல்வத்தை இழந்து வருகிறது.இந்தியாவில் இருந்து, ஏற்கனவே வெளியேறி விட்ட கறுப்பு பணத்தை மீட்பதற்கு தான், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கறுப்பு பணம் உள்ளவரை இது தொடரும். அரசியல் கொள்கைகளை உருவாக்குவோரும், விமர்சிப்போரும், நாட்டில் இருந்து வெளியேறும் கறுப்பு பணத்தை தடுப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.


சுணக்க நிலை:
கடந்த 2010ம் ஆண்டு, அனைத்து வளரும் நாடுகளில் இருந்தும், 85,880 கோடி டாலர் கறுப்பு பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.இது, 2008ம் ஆண்டில், அமெரிக்க பொருளாதார சுணக்க நிலைக்கு, முன்பான, மிக உயர்ந்த பட்ச தொகையை (87,130 கோடி டாலர்) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.வளரும் நாடுகளை பொறுத்தவரை, அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இழந்ததில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 10 ஆண்டுகளில், 27.4 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளது. 


பிலிப்பைன்ஸ்:
அடுத்த இடங்களில், மெக்சிகோ (47,600 கோடி டாலர்), சவுதி அரேபியா (20,100 கோடி டாலர்), ரஷ்யா (15,200 கோடி டாலர்), பிலிப்பைன்ஸ் (13,800 கோடி ரூபாய்), நைஜீரியா (12,900 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியா (12,300 கோடி டாலர்) எட்டாவது இடத்தில் உள்ளது.

கருக்கலைப்புக்கு சட்டம் அனுமதி

டப்ளின்: அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, தாயின் உயிருக்கு ஆபத்து இருக்குமேயானால் கருக்கலைப்பு செய்யலாம் என அறிவுறுத்துகிறது. கருக்கலைப்பு தொடர்பாக சில வாரங்களுக்கு முன் அயர்லாந்தில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சவீதா மரணமடைந்தத‌ை அடுத்து 7 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்புக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல

புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

"சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரித்தது.

இந்நிலையில், மானிய விலையில், "காஸ்' சிலிண்டர்களை வழங்குவதால், தங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளன. 

இதுகுறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:மானிய விலையில், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் வழங்குவதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை, பலன் கிடைக்கும். இந்த இழப்பை, மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தான், ஏற்க வேண்டும்.ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்தத் தொகை, மிகவும் முக்கியமானது. அவர்களை பொறுத்தவரை, இது, கணிசமான தொகையே. இந்த மானியத்தை பெறுவதற்கான முழு தகுதியும், அவர்களுக்கு உண்டு.

ஆனால், முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என்பது, பெரிய தொகை அல்ல. மேல்தட்டு மக்கள், குடும்பத்துடன் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்காக, ஓட்டலுக்குச் செல்லும்போது, இந்தத் தொகையை விட, அதிகம் செலவு செய்கின்றனர்.எனவே, மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர்களை பெறுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். தாங்களாகவே முன்வந்து, "மானிய விலை சிலிண்டர்கள், எங்களுக்கு வேண்டாம்' என்பதை, சம்பந்தப்பட்ட, "காஸ்' ஏஜன்சிகளிடம், அவர்கள் தெரிவிக்க வேண்டும். மானிய விலை சிலிண்டருக்கு பதிலாக, அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை அவர்கள் பெறலாம். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்


அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தி்ல் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரி்ல்லியன் டன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22 ஆம் தேதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர்.

மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்


புதுடில்லி: தனது ஆண் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு, சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலமாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பஸ் டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பஸ்சை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். பஸ்சில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பஸ் முனிர்கா பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் ஆண் நண்பருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் என்ன செய்கிறாய் என கும்பல் கேள்வி எழுப்ப, அதற்கு நண்பர் பதிலளிக்க, ஒரு கட்டத்தில் கும்பல் ஆண் நண்பரை தாக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கும்பலின் கோபம் இளம்பெண்ணை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அந்த கும்பல். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கும்பல் இளம்பெண்ணை பஸ்சில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பஸ்சில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பஸ்சில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


"மின் உற்பத்தி, வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின் நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின்வெட்டு குறித்த தகவலை, மீடியாக்கள் மூலம், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இம்மனுவுக்கு, டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன் தாக்கல் செய்த பதில் மனு:
மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை, விரைந்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில், மின்சார நிலைமை மேம்படும். மின்வெட்டுப் பிரச்னையை குறைக்க, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டி அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையெனில், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

"முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ள திட்டங்களை, அமல்படுத்த வேண்டும். மின் உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதில் மனுவில் கூறியுள்ளபடி, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, இவ்வழக்கு நிலுவையில் வைக்கப்படுகிறது. விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT