உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 December 2012

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்


அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தி்ல் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரி்ல்லியன் டன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22 ஆம் தேதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT