உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

10 August 2012

டெசோ மாநாட்டுக்கு தடை இல்லை ; ஆனால் ஈழம் என்ற வார்த்தைக்கு மத்தியஅரசு தடை


சென்னை: தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் தி. மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு தனிக்கொள்கை உண்டு. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இக்கட்சி மாநாடு நடத்துகிறது. இது போன்ற மாநாடு நடத்துவதற்கு அரசியல்கட்சிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இந்த மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். ராம்தேவ் போராட்டம் குறித்த கேள்விக்கு இது விளம்பர நோக்கம் கொண்டது என்றார். 

தமிழ் ஈழம் என்ற வார்த்தை கூடாது: இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT