உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

10 August 2012

டெசோ மாநாடு நடக்குமா ?


சென்னை: இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் தரப்பில் கேட்கப்படும் விளக்கத்திற்கு உரிய பதில் தி.மு.க., அளிக்கவில்லை என்றும் இதனால் சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் ஆஜராக வக்கீல் சென்னை கோர்ட்டில் தெரிவித்தார்.

டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரும் வழக்கு சென்னை கோர்ட்டில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் நவநீதகிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்ததாவது: சென்னை ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் எத்தனை பேர் வருவர் என்றும், எத்தனை வாகனங்கள் வரும் என்றும் தி.மு.க.,விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சரியான பதில் எதுவும் இல்லை. சென்னையை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் மாநாட்டை நடத்தட்டும் என தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான உத்தரவை பிறப்பித்த நீதிபதி இது தொடர்பாக தமிழக போலீசாரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.


காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் :தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதற்கிடையில் இம்மாநாட்டில் ஈழம் ‌என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தி.மு.க., தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் தி. மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு தனிக்கொள்கை உண்டு. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இக்கட்சி மாநாடு நடத்துகிறது. இது போன்ற மாநாடு நடத்துவதற்கு அரசியல்கட்சிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இந்த மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். ராம்தேவ் போராட்டம் குறித்த கேள்விக்கு இது விளம்பர நோக்கம் கொண்டது என்றார். 

தமிழ் ஈழம் என்ற வார்த்தை கூடாது: இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது இம்மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தமிழ்தலைவர்கள் வரவுள்ளனர். இவர்களுக்கான விசா தொடர்பான அனுமதி கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மாநாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று பதில் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெசோ என்பதன் முழு விளக்கத்தின்படி தமிழ் ஈழம் சப்போர்ட்டிங் ஆர்‌கனிசேஷன் என்று வருகிறது. அப்படியானால் இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT