உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

07 August 2012

ஜீன்ஸ் அணியும் பெண்கள் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் முழுவதும் ஜீன்ஸ் அணியும் பெண்கள் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி சங்கம் சார்பில் கைகளால் எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் காணப்படுகிறது. ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பிறகு பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது எனவும், மீறி அணியும் பெண்கள் மீது ஆசிட் வீசப்படும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நிலங்களை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள் மீதும் இது போன்ற தாக்குதல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற எச்சரிக்கை போஸ்டர்களை தாங்கள் முதல் முறையாக இப்போது தான் பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT