உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

25 June 2012

பெற்றோரே பிச்சை எடுக்க வைத்த 10 வயது சிறுவன் மீட்பு

 பெற்றோரே பிச்சை எடுக்க வைத்த பத்து வயது சிறுவன் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பு மூலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். நாகர்கோவில் வடசேரி பஸ்ஸ்டாண்டில் பத்து வயது சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்த சில பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுவனை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவனின் பெயர் அய்யப்பன் (10) என்பதும், தந்தை பெயர் மணிகண்டன் , வெள்ளமடத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தனக்கு படிக்க ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் பெற்றோரே என்னை பிச்சை எடுக்க அனுப்பியதாகவும் போலீசிடம் சிறுவன் தெரிவித்தான். இதை தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பு மூலம் நெல்லை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சிறுவனின் பெற்றோர் தலைமறைவாகி விட்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT