உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

22 June 2012

விஜயகாந்துக்கு காங்., கோரிக்கை


"ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.
அவர் கரூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சில காரணங்களை அவர் கூறியுள்ளார். ஆனால், முல்லை பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக அளித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழ் மக்களின் உணர்வை மதித்து, ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டளித்தது. தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே, அது கட்சியின் முடிவாக இருந்தாலும், அதை விஜயகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

கேரளா ஆளுங்கட்சியினர், தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர். சிறுவாணி ஆற்றின் நடுவே அணை கட்ட கேரளா முயற்சிக்கிறது. அணை கட்டினால், கோவை, ஈரோடு மாவட்டங்கள் பாதிக்கும்.கோவைக்கு சிறுவாணி தான் ஜீவாதாரம். கோவையில் மட்டும், 27 சதவீதம் கேரளா மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் பாதுகாப்பு வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT