உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

18 June 2012

அப்துல்கலாமுக்கு திடீர் ஆதரவு ; பிரணாப்புக்கு எதிராக ஊழல் புகார்


புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யாரை ஆதரிப்பது, யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நாடு முழுவதும் பாமரன் முதல், உயர் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் ஆளுக்கொரு கருத்தை சொல்லி விவாதித்து வருகின்றனர். இந்தவகையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களின் கொள்கைக்கு எதிராகவும், சிலர் நேர்மறையாகவும், இவர்கள் இப்படிச்சொல்வார்களா என்று வியக்கும் அளவிற்கு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் : காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவர் என்ற பேச்சு எழுந்தபோது பிரணாப் முகர்ஜிக்கு தி,மு.க., முழு ஆதரவு அளிக்கும் என முன்கூட்டியே தெரிவித்திருந்தது. ஆனால் சொந்த மாநிலத்துக்காரரான, அப்துல்கலாமை தி.மு.க., மறந்து விட்டது. இதில் மாறுபட்டு மேற்குவங்க மாநிலத்துக்காரரான பிரணாப்பை இம்மாநில முதல்வரான மம்தாபானர்ஜி கடுமையாக எதிர்த்தார். அப்துல்கலாமே எங்கள் வேட்பாளர் என ஓங்கி ஒலித்தார். காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி தர்மத்தை கூட அவர் பார்க்கவில்லை. இது போல காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத போதும் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரணாப்பை ஆதரிப்பதாக சோனியாவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

தமிழக முதல்வர் ஜெ., மலை வாழ் குடியை சேர்ந்த பி.ஏ.,சங்மாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு பா.ஜ., கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பிஜூஜனதா தளத்தை சேர்ந்த ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கும் ஆதரவு அளித்துள்ளார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் , கலாமுக்கு ஆதரவு அளிக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் யாருக்கு ஆதரவு ?தமிழகத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்கள் அப்துல்கலாமுக்கு ஆதரவு இல்லை, பிரணாப் தான் தகுதியானவர் என சர்டிபிகேட் கொடுத்து விட்டது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது கருத்தில் அப்துல்கலாம் போட்டியிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லாதபோது போட்டியிட்டு தனது இமேஜை குறைக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.

அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த்கெஜ்ரிவால், மனிஷாசிசோடியா ஆகியோர் பிரணாப் மீது முறைகேடு புகார் இருப்பதால் இவர் இந்த உயர் பதவிக்கு லாயக்கற்றவர் என வர்ணித்துள்ளது. 

இந்து மதத்தின் முக்கிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அப்துல்கலாமுக்கு ஆதரவு அளித்துள்ளது . கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். இவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் நல்லது தான் ஆனால் இதனை நாங்கள் முடிவு செய்ய முடியாது. சட்டரீதியிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மோகன்பகவத் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT