உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

21 June 2012

அரசு கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீடிப்பு

புதுச்சேரி : அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சேர்க்கை முறை கன்வீனர் சவுந்தர வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் சொசைட்டி கல்லூரிகளில், 2102 -13ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த சேர்க்க முறையில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஒருங்கிணைந்த சேர்க்கை முறையில் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. -krk network-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT