உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

30 June 2012

தமிழக மக்களை கண்டு கொள்ளாத மத்திய அரசு: விஜயகாந்த் பாய்ச்சல்!


தர்மபுரி: தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவி்த்துள்ளார்.
தர்மபுரியில் நேற்று தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, மக்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இருவரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து குடியரசு தலைவர் தேர்தலை தேமுதிக புறக்கணித்து உள்ளது என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT