உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

26 June 2012

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்து, 7 மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது....
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் 104ல் இருந்து தற்போது 244 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுக் கூடங்கள் 5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று 7 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது.
வினாத்தாள்களை உதவிக் கருவூலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்புவது, அவற்றை சரியாகப் பிரித்தளிப்பது, அவை பாதுகாப்பாகச் சென்று சேர்வது, பின்னர் வினாத்தாள்கள் முறைப்படி பாதுகாப்பாக திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள்களின் விடைகள் (கீ-ஆன்ஸ்வர்) அன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வோம். யாராவது பணம்பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தருவோம், நாங்கள் உத்தரவாதம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நபர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி.
இந்த முறை கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதற்கு வெளிப்படைத்தன்மை காரணமாக இருக்கலாம். ஆன்லைனில் அப்ளை செய்வது உள்ளிட்ட காரணங்களால் அதிகம் பேர் எழுதுகின்றனர்.
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
வி.ஏ.ஓ தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதற்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஓரிரு நாளில் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகளை ஆலோசித்தோம். ஆனால், லட்சக்கணக்கானோர் எழுதும் போது அதில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. அவை பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் துறை ரீதியான பதவி உயர்வு குறித்த தேர்வுகளை ஆன்லைனில் எழுதுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்றன் தேர்வுகளில் 12 லட்சத்து 50 ஆயிரம் தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வுகளுக்கான அனைத்துப் பணிகளும் நடவடிக்கைகளும் வரும் 2013 ஜனவரிக்குள் முடிந்து விடும்.
இந்தத் தேர்வுகளில் ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டு அவை அங்குள்ள அதிகாரியின் மூலம் அப்போதே கண்காணிக்கப்படும். மற்ற தேர்வு மையங்களில் வீடியோ பதிவு சேமித்து வைத்து அனுப்பிவைக்கப்படும்... என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT