உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

23 July 2012

திறந்த வெளியில் கழிவுகளை வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: புதிய சட்டம்

திறந்த வெளியில் கழிவுகளை வீசினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஆறுகள் மற்றும் பொது இடங்கள் உட்பட சுற்றுப்புறங்கள் மாசுபடுவதை தடுப்பதற்கு, கேரள அரசு பதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளது.அதன்படி பொது இடங்களில் சிறு நீர் கழித்தால், 100 ரூபாய் அபராதமும், இந்த தவறு தொடர்ந்தால், தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீரை பொது இடங்களில் திறந்து விட்டாலோ, திறந்த வெளியில் கழிவுகளை வீசினாலோ, குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்காத பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். வீடுகளில் உள்ள கழிப்பறை கழிவுகளை ஓடைகளில் திறந்து விட்டால், 500 ரூபாயும், குடி நீர் மற்றும் துணி துவைக்கும் கழிவு நீர் போன்றவற்றை பொது இடங்களில் திறந்து விட்டால், 2,500 ரூபாயும், அபராதமாக வசூலிக்கப்படும். ஓட்டல்களில் இருந்து கழிவு நீரை நேரடியாக ஆறுகளில் திறந்து விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால், 500 ரூபாயும், அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகளை வாடகைக்கு கொடுத்தால், 250 ரூபாயும், அபராதமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT