உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

20 July 2012

தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன்

பெரம்பலூர்: பெரம்பலூரில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த சோலமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் பரத் ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று பரத் ராஜ் செய்த தவறு ஒன்றிற்காக அவனது விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய பரத் ராஜ், சொந்த ஊர் திரும்பி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தற்போது சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT