உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

21 July 2012

மனிதன் தோன்றியது எப்போது?


    இறைவன் படைத்த ஆதாம் ஏவாள் மூலம் மனித இனம் தோன்றி வளர்ந்ததாக கிறிஸ்துவர்களின் மறை நூல் கூறுகிறது. மனிதனை முழு மனிதனாகவே இறைவன் படைந்தான் என்பது இஸ்லாமிய   மறை மொழி.

         மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, ஆங்கில விஞ்ஞானியான டார்வின் பல ஆராய்சிகள் செய்து, 1859 ஆம் ஆண்டில் தன் முடிவுகளை வெளியிட்டார்.  அவருடைய ஆராய்ச்சியின் படி , சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியது. முதுகெலும்பு உள்ள சில பிராணிகளும், இலை இல்லாத சில தாவரங்களும் அப்போது உருவாகின. இறகில்லாத சில பூச்சிகளும் உண்டாகின. இதை தொடர்ந்து நிலத்தில் ஊர்ந்து வாழும் முதலை, பல்லி, பாம்பு, ஆமை போன்ற ( ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் ) உண்டாகின. விலங்குகள் இனமும், தாவர இனமும் பெருகின. மாமிசம் தின்னும் பிராணிகள் தோன்றின. ஊர்ந்து செல்லும் பிராணிகளில் இருந்து சில பாலுடிகள் உண்டாகின.

          ஊர்ந்து செல்லும் பிராணிகள் சிலவற்றுக்கு இறகுகள் முளைத்து, சில வகை பறவைகள் உண்டாகின. யானை, காண்டபிருகம், பன்றி போன்ற மிருகங்களின் முன்னோடிகள் தோன்றின. வால் இல்லாத குரங்குகள் உருவாகியது. தோற்றத்தில் மனிதனை போல உள்ள குரங்குகள் பெருகின. மேலும் வளர்ச்சி அடைந்து சட்ட்று பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடையனவாக உருமாறியது.
இந்த குரங்குகளில் இருந்து தோன்றியவர்களே மனிதர்கள். இதுவே டார்வின் சித்தாந்தம். 


         குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக தோன்றி இருக்க முடியாது என்றும், இக்குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

     பொதுவாக  " குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் "  என்ற கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஒப்புகொள்ளபடுகிறது. மனிதனை போல தோற்றம் கொண்ட குரங்குகள் தோன்றி ஒரு கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றி சுமார் 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

        ஆரம்பத்தில் மனிதன் காட்டுமிராண்டி போலவே வாழ்ந்து வந்தான். உணவு தேடுவதே அவன் வேலையாக இருந்தது. பிறகு கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாது காத்துக்கொள்ள வேட்டையாடினான். இறைச்சியை சுடவும், குளிரில் இருந்து தன்னை காத்துகொள்ளவும் நெருப்பை பயன் படுத்தினான். மெதுவாக மனிதனில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலம் உலகின் போக்கையே மாற்றியது என்று கூறலாம். மனித வாழ்க்கை, நாகரிகம் ஆகிய அனைத்தும் மாறின, நாகரிகம் வெகு வேகமாக வளர தொடங்கியது என்றும் கூறலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT