உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

31 July 2012

முதல்வர் அறிக்கைகள் அறிக்கைகளாகவே இருக்கின்றன: விஜயகாந்த் வருத்தம்


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கவுள்ளார். 

இதுகுறித்து, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் கூறியதாவது:எனது, பிறந்தநாளையொட்டி ஆக., 1ம் தேதி முதல் செப்., 1ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் பணியையும் மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 லட்சம் ரூபாய் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நான் சட்டசபைக்கு செல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அரசு பணி பாதிக்காதா?

முதல்வர் கொடநாட்டில் ஒய்வெடுப்பதால் மட்டும் அரசு பணிகள் பாதிக்காதா? அங்கிருந்து தினமும் 100, 200, 500 கோடி ரூபாய் திட்டங்கள் என முதல்வர் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அறிக்கைகள், அறிக்கைகளாகவே இருக்கின்றன. மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.சட்டசபைக்கு செல்வது எனது தனிப்பட்ட விருப்பம். நான் விருப்பப்பட்டால், எப்போது வேண்டுமோ, அப்போது அங்கு செல்வேன். நாங்கள், உண்மையான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகின்றனர். எதிரில் அமர்ந்திருப்பவர்களே, எங்களை எதிர்க்கட்சியாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றனர். இப்போது, வேறு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்திற்கு நல்லது செய்யும் அரசு வந்தால், நாங்கள் அதற்காக கூட்டணி வைக்கக் கூடாதா?

பலன் இல்லை:
இலங்கையில் தமிழர்கள் கொன்று முடிக்கப்பட்ட பிறகு, "டெசோ' மாநாடு நடத்துவதால், எந்த பலனும் இல்லை. மாநாடு அறிவித்த கருணாநிதி, தனிஈழம் அமைப்போம் என்றார். அதன்பிறகு நான் அப்படி கூறவில்லை என முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். ஆனால், என் மனதில் பட்டதை மட்டுமே நான் கூறுவேன்.

எங்கெங்கும் கட்டிங்
கட்டிங் வாங்கும் கவுன்சிலர்களை அடக்கி விட்டதாக கூறுகின்றனர். கவுன்சிலர்களை கேட்டால், மேலிடமே கட்டிங் வாங்கும்போது, நாங்கள் ஏன் வாங்கக்கூடாது என்கின்றனர். 

சென்னையில் காலரா பரவுவது குறித்து மேயரிடம் கேட்டால், அது வாந்தி, பேதி தான் என்கின்றார். எதுவாக இருந்தாலும், மக்கள்தான் அதில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போல, மக்கள் தேர்தலை புறக்கணித்தால் நாட்டில் மாற்றம் வரும். "டாஸ்மாக்'கை தமிழகத்தில் அறிமுகம் செய்தது ஒரு கட்சி. மதுவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது மற்றொரு கட்சி. மதுவிலக்கை பொருத்தவரை இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது. இரு தரப்பிடமும் கருத்து கேட்டு, அதன்பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT