உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

28 July 2012

இரவு நேரங்களில் வேலை செய்வதால் மாரடைப்பு ஏற்படும்

பெரும்பாலன மக்கள் இரவு நேரங்களில் வேலை செய்பவராக இருக்கின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இரவு நேரத்தில் வேலை செய்து வருகின்றனர். இதில் 25 சதவீத மக்கள் மாரடைப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதற்கு காரணம், இரவில் வேலை செய்வதால் பசி அதிகமாக உண்டாகிறது. பசி காரணமாக கிடைக்கும் உணவு பொருட்களை உட்கொள்வதால் உடலில் தேவைக்கும் அதிகமான கொழுப்புகள் சேர்கிறது.  எனவே உடல் எடை அதிகரிக்க செய்கிறது. பகலில் உறங்குவதாலும், சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளாததாலும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

நாம் உடலை வருத்தி இரவு நேரங்களில் வேலை செய்வதால் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைவதோடு செரிமான கோளாறு ஏற்படுகின்றது. அதிக நேரம் உறங்காமல் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT