புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வரும் ஜூலை 6ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள ஜூலை 20ம் தேதி கடைசிநாள். அதற்கு அடுத்த நாள் வேட்பு மனு பரீசிலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள ஜூலை 23ம் தேதி. துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஆகஸ்ட் 7ம் தேதி அன்றே நடைபெறும். லோக்சபா மற்றும் ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களும் இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் தகுதி பெறுகின்றனர். இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது 20 பேர் முன் மொழிய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.






