இளையதளபதி விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கியில் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. தொடர்ந்து விஜய், இய்ககுனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது இப்படத்தில் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாக இயக்குனர் கவுதம்மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது தான் இயக்கியுள்ள நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ஜூலை முதல் வாரத்திலும், படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என்றும், ஜெய் -ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார். -KRK NETWORK-
தற்போது இப்படத்தில் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாக இயக்குனர் கவுதம்மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது தான் இயக்கியுள்ள நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ஜூலை முதல் வாரத்திலும், படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என்றும், ஜெய் -ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார். -KRK NETWORK-






