விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து அடுத்த இயக்க திட்டமிட்டிருந்த படத்துக்கான படப்பிடிப்பு மும்பையில் ஜுன் 3ம் தேதி துவங்கியது.
அஜித் முன்னர் கூறியதுபோல, இனி தனது வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரமாக தேர்வு செய்து இப்படத்தில் நடித்து வருகிறார்.
மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படப்பிடிப்பில் அஜித் மேக் அப் போடாமல் இயல்பாக நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு சிறுத்தை பட இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
-KRK NETWORK-






