நாகப்பட்டினம் : நாகை கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில், கள்ள நோட்டுகள் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நாகை கலெக்டர் அலுவலக வாயிலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கான, தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்., மையம் உள்ளது. அதில், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, இறால் வியாபாரி வெற்றி செல்வன், 37, என்பவர், நேற்று காலை, பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தார். 500 ரூபாய் நோட்டுகளாக, 20 நோட்டுகள் வந்ததில், மூன்று, கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. ஒரே சீரியலில் நோட்டுகள் இருந்ததால், கள்ள நோட்டுகள் என்பதை உறுதி செய்த வெற்றி செல்வன், ஏ.டி.எம்., மைய பாதுகாவலரிடம் கேட்டுள்ளார். திருவாரூரில் உள்ள வங்கி கிளையை அணுகுமாறு அவர் கூறியதை அடுத்து, வெற்றி செல்வன், நாகூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். -KRK NETWORK-






