சென்னை:கிரிக்கெட் வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் அபராபாத் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் தர்மன்,21. பொறியியல் மாணவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியவர். கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்ட இவர், இந்திய அணியில் விளையாட வேண்டும் என, பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன் தினம், சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியபோது, இவரது அணி தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டு முதல் மாடியில், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். -KRK NETWORK-






