தஞ்சாவூர்: நித்தியானந்தா சீடர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் நீதிம்ன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மதுரை ஆதினத்திறகு சொந்தமான அக்னீஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே கஞ்சனூரில் உள்ளது. இந்த கோவில் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக சீடர்கள் ஹம்சானந்தா, பரமானந்தா ஆகியோர் சென்றனர். அப்போது கஞ்சனூரை சேர்ந்த மதுரை ஆதீன மீ்ட்புக்குழுவை சேர்ந்த தங்கநடராஜன், மணிகண்டன், பிரபு, சக்திமுருகன் உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கியதாக சீடர்கள் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மேற்கண்ட ஐந்துபேர் மீதும் திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமின் வழங்க கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் நீதிபதி சரவணன் ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். -KRK NETWORK-






