புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்தை கறம்பக்குடி யூனியன் மாங்கோட்டை என்ற இடத்தில் விஜயகாந்த் துவக்கினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் ஓட்டளிக்க அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, பின்னர் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால் மின்சாரம் தொடர்ந்து வருவதாகவும், தேர்தல் முடிந்த பின் மின்சாரம் நின்று விடும் என்றும் அவர் கூறினார். -KRK NETWORK-






